Tuesday, January 14, 2020

ஸ்ரீ அனுமத் ஜெயந்தி

🙏🙏 *ராம ராம* 🙏🙏

ஸ்ரீ ஆஞ்ஜநேயர் திருவடிகளே சரணம்!

ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தின் நிறைவில் அநுமன் தம் வானரப் படைகளுடன் சீதாப் பிராட்டியை தேடி வந்துகொண்டிருக்கும்போது ஜடாயுவின் சகோதரனாகிய சம்பாதி (கழுகு) தனக்கு இறக்கைகள் இல்லாமையால் மலை ஒன்று நடந்து வருவது போல வந்து அநுமனைக் கண்டான்.

தன் தம்பி ஜடாயு உயிர் நீங்கிய விபரம் யாது என கேட்க அநுமன் முழு நிகழ்வினையும் சொல்லி முடிக்க

சம்பாதியும் தன் தம்பி ஜடாயு  ராம சேவைக்காக உயிர் நீங்கியது அவனுக்குப் பெரும் புண்ணியமே எனக் கூறி ஜடாயுவுக்காக ஆற்ற வேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்தான். அதனால் முழு மனநிறைவும் அடைந்தான்.

பிறகு அநுமன் முதலியோரை வணங்கி, 'நீங்கள் என்னை வாழ்வித்தீர்கள்; இப்போது நீங்கள் யாவரும் *ராம ராம* என உச்சரியுங்கள் எனக்கு ஓர் சிறந்த பயன் கிடைக்கும் எனச் சொல்லுகிறான்.
*எல்லீரும் அவ் இராம நாமமே சொல்லீர் ;* * **சொல்ல* *எனக்கு ஓர் சோர்விலா நல் ஈரப் பயன் நண்ணும்*                 
என்பது கம்பன் பாடல்.

அப்போது அநுமன்,அங்கதன்,ஜாம்பவான் மற்றும் வானரக் கூட்டங்கள் ராம் ராம் என உரத்த குரலில் உச்சரிக்கவும் சம்பாதியின் இறகுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதைக் கண்டார்கள்; வியப்படைந்தார்கள் ; மேலும் மேலும் பக்திப் பரவசத்தோடு முழங்க,முழங்க சம்பாதியின் இறகுகள் முழு வளர்ச்சி அடைந்தன.
சம்பாதியும் மிக மகிழ்ந்து நன்றி சொல்லி எல்லோரையும் வணங்கி ராம் ராம் எனக் கூறிக் கொண்டே தம் இருப்பிடம் நோக்கி நகர்ந்தான்.

மேற்கண்ட செயல் நிகழ்ந்த விநாடிவரை இராமனுக்கு தொண்டு செய்வதையே அநுமனின் குறிக்கோளாக இருந்தது.அவனை விட பெரியதும் உயர்ந்ததும் ஒன்றும் இல்லை எனவும் நம்பியிருந்தான்.

சம்பாதிக்கு அற்புதம் நிகழ்ந்த மறுகணமே அநுமனின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

சம்பாதிக்கு அற்புதம் நடந்த நேரத்தில் ஸ்ரீ ராமன் அந்த இடத்தில் இல்லை.பல காத தூரம் தள்ளி கிஷ்கிந்தையில் உள்ளான்.
ஆனால் அவனது திருப்பெயரை (நாமத்தை) பலரும் உள்ளன்புடனும்,பக்தியுடனும் கூறியபோது அரிய செயல் நடந்துவிட்டதை எண்ணி,எண்ணி பக்தி வெள்ளத்தில் அநுமன் திளைத்தான்.மெய் சிலிர்த்தான்!

இராமனை விட அவனது திருநாமம் மிக உயர்ந்தது என்பதை கண்கூடாக தெளிந்துவிட்டான்.

இனி கடலைத் தாண்டவும்,அரக்கர் கோட்டையுள் புகவும்,சீதாப் பிராட்டியாரைத் தரிசித்து மீளவும் *ராம நாமமே அருமருந்து* என அறிந்துவிடுகிறான்.  பிறகு       

ஜாம்பவான் அநுமனின் சக்தியை கூறிய அளவில் தன் வலிமை பெருகியதை அறிந்து மகிழ்ந்து *ராம் ராம்* எனக் கூறிக்கொண்டே *விஸ்வ ரூபம்* எடுத்தார்.

நாமும் இத் திருநாளில் ராம் ராம் என ஜெபித்திடுவோம்!
நல் வளமும்,நலனும் பெற்று உய்ந்திடுவோம்!

        🙏 *ஜெய் ஸ்ரீ ராம்* 🙏.

1 comment:

  1. What does + mean in sports betting? - Sporting 100
    In a sports betting scenario, a wager on a team to win is 스포츠 토토 사이트 split into 2. The team with the wager is split into 2. The wager is split into 3.

    ReplyDelete